இன்றைய பஞ்சாங்கம்
29-06-2019, ஆனி 14, சனிக்கிழமை, ஏகாதசி திதி காலை 06.45 வரை பின்பு தேய்பிறை துவாதசி.
பரணி நட்சத்திரம் காலை 09.57 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷம்
இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடக்கும்.
பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
உறவினர்கள் மூலம் ஆதாயம் கிட்டும்.
புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும்.
பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும்.
தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள்.
வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
வங்கி சேமிப்பு உயரும்.
தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள்.
பொன் பொருள் சேரும்.
கடகம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும்.
நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிட்டும்.
உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும்.
குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும்.
விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறையும்.
கன்னி
இன்று உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம்.
குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும்.
உங்கள் ராசிக்கு மாலை 04.02 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
உத்தியோக ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
துலாம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.
உங்கள் ராசிக்கு மாலை 04.02 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும்.
அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் கைகூடும்.
வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.
குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும்.
வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும்.
உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.
தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம்.
உத்தியோக ரீதியான பயணங்களால் வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும்.
குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.
வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும்.
மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.
வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.
மீனம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
உடன் பிறந்தவர்களோடு சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை.
புதிய நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001
அடேய் பிக்பாஸ் என் செல்லக்குட்டியை அழவச்சுட்டல நீ நல்லாவே இருக்கமாட்ட…!