இன்றைய பஞ்சாங்கம்
28-04-2019, சித்திரை 15, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி இரவு 07.34 வரை பின்பு தேய்பிறை தசமி.
அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 05.17 வரை பின்பு சதயம்.
மரணயோகம் பின்இரவு 05.17 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். புதியமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –
பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 ,
மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
இன்றைய ராசிப்பலன் – 28.04.2019
மேஷம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும்.
பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும்.
பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும்.
மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.
உங்கள் ராசிக்கு பகல் 03.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் சுபகாரியங்களையும் மதியத்திற்கு பிறகு மேற்கொள்வது உத்தமம்.
இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு பகல் 03.45 மணிக்கு பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும்.
வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும்.
எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது.
சிம்மம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும்.
குடும்பத்தில் சுப செலவுகள் தோன்றும்.
சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
பெரிய மனிதர்களால் அனுகூலம் உண்டாகும்.
வியாபார ரீதியாக இருந்த அலைச்சல் சற்று குறையும்.
கன்னி
இன்று நீங்கள் பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும்.
வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.
குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும்.
எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.
துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும்.
பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம்.
எடுக்கும் முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
எந்த செயலிலும் நிதானம் தேவை.
விருச்சிகம்
இன்று வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.
திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.
பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.
குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும்.
மன அமைதி இருக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைந்து காணப்படும்.
ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும்.
சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.
தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை பெற அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது.
மகரம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.
குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல் செலவுகளும் அதிகரிக்கும்.
உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.
பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை.
மீனம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,