இன்றைய பஞ்சாங்கம்
14-07-2019, ஆனி 29, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 12.55 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.
கேட்டை நட்சத்திரம் மாலை 05.26 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 05.26 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு மாலை 05.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது.
மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
சுபகாரிய முயற்சிகளை தவிர்க்கவும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.
உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு மாலை 05.25 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
மிதுனம்
இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும்.
குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும்.
திடீரென்று பயணம் செல்ல நேரிடும்.
வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.
லாபம் உண்டாகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படலாம்.
முயற்சி செய்தால் மட்டுமே எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியும்.
விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மனக்குழப்பம் சற்று குறையும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும்.
பழைய கடன் பிரச்சினை தீரும்.
கன்னி
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும்.
பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும்.
வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பொன் பொருள் சேரும்.
துலாம்
இன்று உங்களுக்கு மன அமைதி குறையும்.
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும்.
சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும்.
உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.
தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
திடீர் பணவரவு உண்டாகும்.
தனுசு
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம்.
உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம்.
குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும்.
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் கிட்டும்.
தெய்வ வழிபாடு நல்லது.
மகரம்
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.
உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும்.
வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள்.
எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்-கும்.
குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.
உடல் ஆரோக்கியம் சீராகும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும்.
நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.
வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,