இன்றைய பஞ்சாங்கம்
12-05-2019, சித்திரை 29, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி மாலை 05.37 வரை பின்பு வளர்பிறை நவமி.
ஆயில்யம் நட்சத்திரம் பகல் 11.54 வரை பின்பு மகம்.
சித்தயோகம் பகல் 11.54 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷம்
இன்று இல்லத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.
பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள்.
உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
நினைத்தது நிறைவேறும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும்.
பிள்ளைகள் பெருமைப்படும் படி நடந்து கொள்வார்கள்.
சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உடல்நிலை சீராக இருக்கும்.
பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.
மிதுனம்
இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம்.
உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும்.
வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம்.
நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாடு நல்லது.
கடகம்
இன்று புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை கூடும்.
பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் சாதகமற்ற சூழ்நிலை உருவாகும்.
நெருங்கியவர்கள் மூலம் வீண் பிரச்சினைகள் வரலாம்.
தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும்.
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தொழில் ரீதியாக புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும்.
பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும்.
தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
சுப செலவுகள் உண்டாகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சுபசெலவுகள் செய்ய நேரிடும்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும்.
அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலையும் செய்து முடிக்க கடின உழைப்பு தேவை.
வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மனைவி வழி உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
தனுசு
இன்று பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
உங்கள் ராசிக்கு பகல் 11.54 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமை தேவை.
மதியத்திற்கு பின் சுப முயற்சிகளை செய்வது உத்தமம்.
பிரச்சினைகளும் ஓரளவு குறையும்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.54 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் ஏற்படும்.
செய்யும் செயல்களில் தாமதங்கள் உண்டாகும்.
உற்றார் உறவினர்களுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
பயணங்களை தவிர்க்கவும்.
கும்பம்
இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும்.
உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும்.
பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.
வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
மீனம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும்.
நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும்.
தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும்.
குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
பொன் பொருள் சேரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001