இன்றைய பஞ்சாங்கம்
03-05-2019, சித்திரை 20, வெள்ளிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.04 வரை பின்பு அமாவாசை.
ரேவதி நட்சத்திரம் பகல் 02.40 வரை பின்பு அஸ்வினி.
சித்தயோகம் பகல் 02.40 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.
தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் – 03.05.2019
மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம்.
வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்.
எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.
சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.
உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.
இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.
வியாபாரத்தில் கூட்டாளிகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.
உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.
புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கடகம்
இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும்.
குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.
வேலையில் உடன் பணிபுரிபவர்களால் நற்பலன்கள் கிடைக்கும்.
வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படலாம்.
உங்கள் ராசிக்கு பகல் 2.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.
புதிய முயற்சிகளில் தாமதப் பலன் கிட்டும்.
உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள்.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு பகல் 2.40 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.
மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.
சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பணப்பிரச்சினைகள் நீங்கும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
உத்தியோகத்தில் சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும்.
பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.
சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும்.
பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.
சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும்.
நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
பொருளாதார பிரச்சினை குறையும்.
மகரம்
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள்.
சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
புதிய பொருள் வீடு வந்து சேரும்.
பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவினாலும் சிறுசிறு மனஸ்தாபங்களும் உண்டாகும்.
திருமண முயற்சிகளில் தாமதப்பலன் ஏற்படும்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள்.
தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.
பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001