தமிழக அரசு

5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்: தமிழக அரசு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.

அதன்படி, கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண்குமார், தென்காசி ஆட்சியராக ஜிகே. அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ், மற்றும் ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினி ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …