ரஜரட்ட நிபுணத்துவ தொழிலாளர்கள் ஒன்றியம், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது 12 விடயங்கள் அடங்கிய திட்ட வரைவும் எதிர்க்கட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் சேவை புரியும் அரசாங்க அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலாநிதிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியாளர்கள் இந்த திட்ட வரைவை தயாரிப்பதற்கு பங்களிப்பு வழங்கியுள்ளனர்.