புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வருவதற்காக, பலாலி வானூர்தி நிலையத்தை மிக விரைவில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, விமானப் பயணங்களை மேற்கொள்வதன் ஊடாக இலங்கைக்கு அந்நிய செலாவணியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.