பிரேரிக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கட்டாயம் திரும்பபெற வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அநுராதப்புரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் இவ்வாறான சட்டமூலத்தை விலக்கி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சட்டமூலம் நாட்டிற்கு தேவையற்ற ஒன்று என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.