பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் கவினை நினைத்து அழும் லாஸ்லியா… தர்ஷன் கொடுத்த அட்வைஸ்…!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் கவினை பிரிந்ததால் அழுதுகொண்டிருக்கும் லாஸ்லியாவிற்கு தர்ஷன் அட்வைஸ் பன்னும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 3-வது சீசன் தற்போது 95 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் கடந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே மூலம் முகேன் இறுதிச்சுற்றிற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரைத் தவிற வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இந்த வாரம் நாமினேஷனில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறார்.

https://www.facebook.com/VijayTelevision/videos/447767122750545/

அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும்.

அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு முதலாவதாக எழுந்த கவின் நான் இந்த தொகையை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்கள் கவினிடம் வீட்டை விட்டு போக வேண்டாம் என்று கூறியும் அவர் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

அனைத்து போட்டியாளர்களிடமும் விடைபெறும் கவினைப் பார்த்து லாஸ்லியா கண்ணீர் விடுகிறார்.

பின்னர் இருவரும் விரல்களைப் பற்றிக் கொண்டு பிரியா விடை கொடுக்கின்றனர். கவின் வெளியேறியது லாஸ்லியாவை சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது.

இந்நிலையில் இன்று 96-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டது. அதில் கவினை நினைத்து லாஸ்லியா அழுகிறார்.

அப்போது அவரிடம் பேசும் தர்ஷன், கவினுக்காவும் உன் அப்பாவிற்காகவும் இந்த போட்டியில் நீ விளையாட வேண்டும் என்று அட்வைஸ் கொடுக்கிறார்.

“நீ இந்த வீட்ல இல்லனாலும் என் மனசுல இருக்கடா…” கவினுக்காக உருகும் சாண்டி!

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …