இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது திராவிட முன்னேற்றக் கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தையும், கசப்புணர்வையும் போக்கும் வகையில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செயற்படுவார் எனத் தான் நம்புவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுள்ள நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றகாலப்பகுதியில் திராவிட முன்னேற்றகழகம் செயற்பட்டவிதம் …
Read More »