Tag Archives: ரணில் விக்ரமசிங்க

ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு

பயங்கரவாத அபாயம்

இலங்கையில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இதன்போது நடப்பு அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளில் இருந்து மீண்டும் வழமைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆரயப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை , பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக சிங்கப்பூர் நோக்கி இன்று மதியம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர்

நாட்டு மக்களுக்கான

இலங்கையில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் அடையாளம் காணப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் உள்நாட்டில் இந்த பயங்கரவாதிகளை அழிப்பதால் மாத்திரம், பூகோளரீதியான பயங்கரவாதத்தை அழித்துவிட …

Read More »