இலங்கையில் சுற்றுலா மற்றும் பயணத்துறையில் சிறுவர் பாலியல் முறைக்கேடுகள் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார்கள் பாலியல் முறைக்கேடுகளுக்கு ஆளாவதில் இருந்து பாதுகாப்பதற்கான கொள்கைகள், இலங்கையில் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் அமுலாக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
Read More »எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ சபாநாயகருக்கு கடிதம்
எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள விவாதத்திற்கான நேரத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பபட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக சுற்றுலாத்துறை உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டிள்ளார். இந்தநிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 5.30 முதல் 7.30 வரை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த விவாதத்தை …
Read More »