கோவையில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிரடி சோதனை செய்து வரும் நிலையில் இந்த சோதனையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவனுடன் கோவை இளைஞன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய அதிரடி விசாரணையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. கோவையின் உக்கடம் என்ற பகுதியை சேர்ந்த முகமது அசாருதின் என்பவனுக்கும் இலங்கை குண்டுவெடிப்பை நடத்திய ஸக்ரான் …
Read More »ஒரு முஸ்லீம் பிரபாகரன் உருவாகிவிடுவார்: அதிபர் எச்சரிக்கை
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு பின் இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது பெரும் கவலையளிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது இந்த நிலையில் இன்று முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற இலங்கை அதிபர் சிறிசேனா, அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, …
Read More »LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
குண்டு வெடிப்புக்களினால் இதுவரை 290 பேர் பலி குண்டு வெடிப்பினால் பலியானோரின் மரண பரிசோதனைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைதான 24 பேர் சி.ஐ.டியில் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு குண்டு வெடிப்புக்கள் – தற்கொலை குண்டுத் தாக்குதல் என உறுதி குண்டு வெடிப்பு ; மேலும் இருவர் கைது! யாழ்ப்பாண பொலிஸாரின் அறிவுறுத்தல்! “மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் …
Read More »பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரை பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டமே இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 தொடர் …
Read More »பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது
இவ்வாறான மோசமான தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம், எமது புலனாய்வு துறையும் இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றது என்றவும் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க …
Read More »இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி
தலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பின் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான …
Read More »குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்த நடிகை ராதிகா!!!
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன் என நடிகை ராதிகா கூறியுள்ளார். ஈஸ்டர் தினமான இன்று கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள தேவாலயம், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்ரிலா ஹோட்டல்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. இதில் மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை ராதிகா தனது டிவிட்டரில் இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. நான் …
Read More »இலங்கை குண்டுவெடிப்பு: ஓபிஎஸ், ஈபிஎஸ், ஸ்டாலின் கண்டனம்
இலங்கையில் உள்ள மக்கள் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடி வந்த நிலையில் இன்று காலை ஆறு இடங்களிலும் சற்றுமுன் இரண்டு இடங்களிலும் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த குண்டுவெடிப்புக்கு கண்டும் கண்டனம் …
Read More »