பாடசாலைகளில் இடம்பெறும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களில் பெற்றோர்களை பயன்படுத்த வேண்டாம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பாடசாலைகளில் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டின் பாதுகாப்பு, சிறந்த நிலையில் காணப்படுவதால் பெற்றோர்களை அதில் பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரால் அனைத்து மாகாண கல்வி செயலாளர்களுக்கும், மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட …
Read More »கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை
இஸ்லாமிய அடைப்படைவாதத்தை கற்பிக்கும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள, அரபு மொழி பாடசாலைகள் மற்றும் மதராசா பாடசாலைகள் என்பன கல்வி அமைச்சின் கீழ் இயங்கவில்லை என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குறித்த பாடசாலைகள் கல்வி அமைச்சின் கீழ் இயங்கியதாகவும், அவற்றில் அடிப்படைவாதம் கற்பிக்கப்பட்டமைக்கு கல்வி அமைச்சே பொறுப்பு கூறவேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையிலேயே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இன்றைய …
Read More »