சோமாலியாவில் அமெரிக்க யுத்த வாநூர்தி மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புண்லண்ட் மாகாணத்தில் உள்ள கோலிஸ் மவுண்டனிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இதே பிரதேசத்தில் இடம்பெற்ற பிறிதொரு வான் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், புதிதாக தமது சட்டவிரோத குழுவிற்காக அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை முன்னர் இணைத்து வந்ததாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். …
Read More »