இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை விலக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை இன்று அலரி மாளிகையில் சந்தித்தபோது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். நாட்டில் நிலைமை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Read More »நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு
இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள் தொடர்பில் இந்திய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த கால ஆட்சி காலத்தில் இந்தியா …
Read More »ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை இலங்கையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை இலங்கையில் அமைக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரனைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் …
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்!
கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு வழிசமைத்து, காவற்துறை மா அதிபரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுமக்களின் அடிப்படை உரிமையை மீறி இருப்பதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு, எதிர்வரும் 31ம் திகதி உயர் நீதிமன்றினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள காவற்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை. எனினும் அவர்கள் சார்பில் …
Read More »இந்திய படையினரால் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளை இலங்கை படையினர் வென்றனர் – ஜனாதிபதி
30 வருட யுத்தத்தைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட தற்போதைய பயங்கரவாத நிலைமையை அழிப்பதற்கான முக்கியப் பொறுப்பு, நாட்டின் புலனாய்வு நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய படையினர் தின நிகழ்வு இன்றையதினம் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையானது நீண்டகால யுத்தத்துக்கு பழகிய நாடாகும். 30 வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தில் இராணுவம் வெற்றிக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா தமது படையினரை …
Read More »விசேட தகவல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க தீர்மானம்
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், உள்நாட்டவர்களையும் உரிய முறையில் அடையாளம் காண்பதற்காக விசேட தகவல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தகவல்கள் மற்றும் அவர்களின் சுற்றுலா என்பன தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது. இது தொடர்பான குழு தற்போது நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார். இலங்கையில் …
Read More »பிரித்தானிய எதிர்கட்சி இலங்கைக்கு வலியுறுத்தல்
இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக்கூறும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய எதிர்கட்சியான தொழில்கட்சி வலியுறுத்தியுள்ளது. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் பத்தாவது நினைவாண்டை முன்னிட்டு, தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபனினால் வெளியாக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்கட்சி எதிர்காலத்தில் பிரித்தானியாவில் ஆட்சி அமைக்கும் போது, தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், இலங்கையில் தமிழர்கள் சுயஅபிலாசைகளும் உரிமைகளும் பெற்று வாழ்வதையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் …
Read More »இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள
இவர்களின் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்த மண்ணே இவர்களின் முன் மூதாதையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்த மண்ணே அவர்கள் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இம் மண்ணே இன்னுயிர் தந்து இவர்களை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இம் மண்ணே இவர்களின் உறவுகள் தோளில் ஆயுதம் ஏந்தி சமர் புரிந்ததும் இம் மண்ணே அவர்கள் உடல் நிர்வாணமாக்கி வீழ்ந்தப்பட்டபோதும் தாங்கி நின்றதும் இம் …
Read More »இலங்கை தமிழ் குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
ஆஸ்திரேலியாவின் சட்டத்தை மீறி அகதிகளாக வந்த இலங்கை தமிழர் குடும்பத்தினரை வெளியேற்றும் அரசின் முடிவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்களே போராடி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடேஷ் மற்றும் பிரியா இலங்கையிலிருந்து அகதிகளாக 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியா தப்பி வந்து அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டனர். தற்போது நான்கு வயது மற்றும் இரண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பிறகு …
Read More »இலங்கைக்கான நிதியுதவியினை மேலும் விஸ்தரிக்கவுள்ள சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 2020ம் ஆண்டு வரை இலங்கைக்கு வழங்கவுள்ள நிதியுதவியினை மேலும் விஸ்தரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் இயக்குனர் ஜெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அடுத்த வாரம் நடைப்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபையின் போது, இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 13 பேர் பலி
Read More »