ரஜினி மகள்

ரஜினி மகள் சௌந்தர்யாவின் முதல் கணவர் விவாகரத்துக்கு காரணம் இது தானாம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ரஜினி மகள் சௌந்தர்யாவின் முதல் கணவர் விவாகரத்துக்கு காரணம் இது தானாம்

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருவது தான் ரஜினிகாந்த். மேலும்,இவர் சினிமா துறை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். ரஜினிகாந்த்க்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இளைய மகள் சௌந்தர்யா.

சமீபத்தில் இரண்டாவது மகள் சௌந்தர்யா அவர்கள் பிப்ரவரி மாதம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது.

இதையும் பாருங்க :இடைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெறும்!

இதனைத்தொடர்ந்து சௌந்தர்யா முழு மாத கர்ப்பிணியாக இருந்தார். பின் சவுந்தர்யா தன்னுடைய மகனைப் பெற்றெடுப்பதற்காக அம்மா வீட்டுக்கு வந்திருந்தார். சில நாட்களிலில் சௌந்தர்யா அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

அந்த குழந்தைக்கு வேத் என்று பெயர் வைத்தார்கள். ஏற்கனேவே சௌந்தர்யாவுக்கு,அஸ்வினுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது. பின் இதன் காரணமாக சௌந்தர்யா பெற்றோர் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விட்டார்.

ஆரம்பத்தில் இவர்கள் இருவரையும் சேர்த்துவைக்கப் பல பேர் போராடினார்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்திருந்தனர். ஆனால், அதெல்லாம் தோல்வியில் தான் முடிந்தது.

பின்னர் சௌந்தர்யா மற்றும் அவர் கணவன் அஸ்வின் இருவரும் மனமுவந்து பிரிக்கிறோம் என்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்குதல் செய்தனர்.

இதையும் பாருங்க :சமூகப் புரட்சியின் சாட்சி அசுரன்! வெற்றி மாறன், தனுஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் சீமான்

பின்னர் இவர்கள் விவாகரத்தும் பெற்றுக் கொண்டார்கள். அதுக்கு பின் சௌந்தர்யா தன்னுடைய மகன் வேத்துடன் ரஜினிகாந்த் வீட்டில் தான் வசித்து வருகிறார். மேலும்,சௌந்தர்யா விவாகரத்துக்கு பின் தன்னுடைய முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதும், அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது போன்ற வேலைகளில் தீவிரம் செலுத்தி வந்திருந்தார்.

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், கோவை தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகன் ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள் என்ற தகவல் வெளியானது. மேலும், இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள்.

தற்போது விசாகனுக்கும் சௌந்தர்யாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. தற்போது இயக்குனர் சௌந்தர்யா அவர்கள் தன்னுடைய முதல் கணவர் அஸ்வினை பிரிவதற்கு காரணமாக இருந்த தகவலை இத்தனை வருடங்கள் கழித்து தெரிவித்துள்ளார். சௌந்தர்யா எப்போதும் கோபப்படுவது இயல்பான ஒன்று.

இந்த நிலையில் தன்னுடைய புகுந்த வீட்டிலும் சௌந்தர்யா சற்றும் மாறாமல் எதுக்கெடுத்தாலும், எந்த விஷயத்திற்கும் பொறுமையாக கேட்காமல் கோபப்பட்டு கொண்டிருந்தார்.

இதனை அஸ்வின் குடும்பத்தினரும் மற்றும் அஸ்வினும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின் நீண்ட நாட்களாகவே இருவருக்கும் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டு தான் இருந்தது. சௌந்தர்யா கோபம் குறித்து ரஜினிகாந்தும் பலமுறை கெஞ்சியுள்ளார்.

மேலும்,சௌந்தர்யாவிடம் கோபத்தை குறை என்று அறிவுரையும் கூறியுள்ளார்கள். ஆனால், அவர் கண்டுக்கவே இல்லை.ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி இருவரும் பரஸ்பரமாக பிரிய தொடங்கினர்.

மேலும்,சௌந்தர்யாவின் கோபம் தான் இவர்களின் விவாகரத்து காரணம் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என்று கூறினார்கள். இந்த தகவல் தெரிந்ததும் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.

ரஜினி மகள்

ரஜினி மகள்

ரஜினி மகள்

இதையும் பாருங்க :இடைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெறும்!

சமூகப் புரட்சியின் சாட்சி அசுரன்! வெற்றி மாறன், தனுஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் சீமான்

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …