ரஜினிகாந்த்

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் ’என் மீது நம்பிக்கை வைத்து யாரும் இதுவரை வீண்போகவில்லை என்றும் அதேபோல் நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என்றும் தெரிவித்தார்

தமிழகம் முதல் முதலாக வந்த போது தமிழக மக்கள் என் மீது நம்பிக்கை வைத்ததை தான் அறிந்து கொண்டதாகவும் என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்த கே பாலச்சந்தர் அவர்களும், என்னை நம்பி ஹீரோ கேரக்டர் கொடுத்த கலைஞானம் அவர்களும் வீண் போகவில்லை என்றும் கூறினார்

அதன் பிறகு கடந்த 40 வருடங்களில் சுமார் 100 தயாரிப்பாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து படங்களை தயாரித்தார்கள் என்றும் அவர்களுடைய நம்பிக்கையும் வீண் போகவில்லை என்றும் கூறினார்

அதேபோல் ரசிகர்களாகிய நீங்கள் வைத்த நம்பிக்கையும் வீண் போகாது என்று அவர் மறைமுகமாக தனது அரசியல் வருகையை கூறியபோது ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது என்பதும் இந்த கரகோஷம் ஒரு சில நிமிடங்கள் கரகோஷம் தொடர்ந்து கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/VLFDcUCsPW4

About அருள்

Check Also

ரஜினி

உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவில்லை : ரஜினி மன்றம் அறிக்கை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!7Sharesரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு …