இன்றைய ராசிப்பலன் 07 கார்த்திகை 2019 வியாழக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 07 கார்த்திகை 2019 வியாழக்கிழமை – Today rasi palan – 07.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 07-11-2019, ஐப்பசி 21, வியாழக்கிழமை, தசமி திதி காலை 09.55 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சதயம் நட்சத்திரம் காலை 09.15 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் காலை 09.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – மதியம் 01.30-03.00, …

Read More »

இன்ஃபோசிஸ் எடுத்த அதிர்ச்சியூட்டும் முடிவு..பத்தாயிரம் பணியாளர்கள் வேலை நீக்கம்

இன்ஃபோசிஸ்

ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், பத்தாயிரம் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. தனது நிறுவனத்தின் வருவாயை பெருக்கும் நோக்கில், பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், உயர்பதவிகள், மத்திய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் பல நாடுகளில் பல கிளைகளை உடைய நிறுவனம். இந்தியாவில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டுள்ளது. மேலும் சென்னை, புவனேஷ்வர், திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட 14 இடங்களில் இதன் …

Read More »

ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக வர மாட்டார்

ஸ்டாலின்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெ.நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக நன்றி …

Read More »

கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகள் இயக்கத்தடை – உயர்நீதிமன்றம் அதிரடி

கொடைக்கானல்

கொடைக்கானல் ஏரியில் தனியார் அமைப்பு மற்றும் தனியாருக்கு சொந்தமான படகுகள் இயக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் ஏரி அருகே பத்தாயிரம் சதுர அடி பரப்பளவுள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டு படகு குழாம், கடைகள் உள்ளிட்டவை நடத்தப்படுவதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. மேலும் செப்டம்பர் 1-ஆம் தேதியுடன் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில் சட்டவிரோதமாக தற்போதும் படகு குழாம் இயக்கப்படுவது …

Read More »

இந்தியாவுக்கு வரப்போகிறது பெரிய ஆபத்து!!

கடல் மட்டம் உயர்வதால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என ஐ.நா.பொதுச்செயலாளர் கூறியுள்ளார். பாங்காக்கில் ஆசிய நாடுகள் உச்சி மாநாடு நடந்துவரும் நிலையில் அதில் பங்கேற்று பேசிய ஐ.நா.வின் பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ், ”வெப்ப நிலை காரணமாக பனி உருகுவதால், கடல் மட்டம் வேகமாக அதிகாரித்து வருகிறது, பருவ நிலை மாற்றத்தாலும் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது” என தெரிவித்தார். மேலும் 2050 க்குள் 30 கோடி மக்கள் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 06 கார்த்திகை 2019 புதன்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 06 கார்த்திகை 2019 புதன்கிழமை – Today rasi palan – 06-11-2019 இன்றைய பஞ்சாங்கம் 06-11-2019, ஐப்பசி 20, புதன்கிழமை, நவமி திதி காலை 07.21 வரை பின்பு வளர்பிறை தசமி. அவிட்டம் நட்சத்திரம் காலை 06.14 வரை பின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் காலை 06.14 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். …

Read More »

மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த 2-ம் தேதி நடிகை மீரா மிதுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. எனக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி அரசு மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதனாலேயே தான் மும்பையில் குடியேறிவிட்டதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் வேறு மாநிலத்திற்கு …

Read More »

சசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்

பரோலில் வெளிவருகிறாரா சசிகலா

சசிகலா குடும்பத்தினர் நடத்தி வரும் 9 போலி நிறுவனங்களின் 1, 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2017-ம் ஆண்டு சோதனை நடத்தினர். சசிகலா குடும்பத்தினர், 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி 1,500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு …

Read More »

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை

வங்கக் கடலில்

அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. எனவே சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இன்று அந்தமான் கடற்பகுதிக்கும் நாளை, நாளை மறுதினம் மத்திய …

Read More »

டாக்டர் வேண்டாம் விஜய்யின் பஞ்ச் வசனம் போதும்

டாக்டர்

பிறவிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் நடிகர் விஜய்யின் வசனத்தைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருவதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி என்ற பகுதியில் செபாஸ்டியன் என்ற சிறுவன் பிறவியிலேயே வாய் பேச முடியாமல் இருந்து வந்துள்ளார். அந்த சிறுவனுக்கு பல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை இந்த நிலையில் தற்செயலாக ஒரு முறை விஜய்யின் ’செல்பிபுள்ள’ ரிங்டோனை …

Read More »