இன்றைய பஞ்சாங்கம் 23-04-2019, சித்திரை 10, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.04 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. கேட்டை நட்சத்திரம் மாலை 05.16 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 05.16 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அங்கார சதுர்த்தி. விநாயகர் – முருக வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 08.50 மணி முதல் 09.26 மணி வரை. இராகு …
Read More »இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க முன்வந்துள்ள சர்வதேச காவல்துறை
நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சர்வதேச காவல்துறை முன்வந்துள்ளது. சர்வதேச காவல்துறையின் செயலாளர் நாயகம் ஜூர்கன் ஸ்ரொக் இதனை தெரிவித்துள்ளார். டுவிற்றர் தளத்தின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், மரணித்த மக்களின் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.
Read More »உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
நாட்டின் 8 இடங்களில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அதியகட்சருமான ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது வரை 115 பேர் தொடந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் 25 பேர் அவசர சிகிச்சை பிரிவில் பெற்று …
Read More »கொழும்பு தனியார் பேருந்து தரிப்பிடத்தில் வெடிப்பொருட்கள் மீட்பு
கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குப்பை பை ஒன்றில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அதியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Read More »காவற்துறை மற்றும் இராணுவத்திற்கு வழங்கப்படவுள்ள அதிகாரம்..
பயங்கரவாத ஒழிப்பு குறித்த சரத்தினை மாத்திரம் இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்ட ஒழுங்குமுறையின் கீழ் வர்த்தமாணி அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவதற்காக காவற்துறை மற்றும் இராணுவத்திற்கும் அதிகாரத்தினை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Read More »குண்டு வெடித்த சங்ரில்லா ஹோட்டலுக்கு பூட்டு
மறு அறிவித்தல் வரை கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டல் மூடப்பட்டுள்ளதாக ஹோட்டல் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அங்கு இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Read More »நாளை தேசிய துக்க தினம்
நாளைய தினத்தை(23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று காலை ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More »குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இழப்பீடு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களின் போது உயிரிழந்துள்ளவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்குதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனுடன் இறுதி சடங்குளுக்காக ஒரு லட்சம் ரூபாயை வழங்குதற்கு இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனுடன் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீடாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More »அவசர தகவல்களை அறிவதற்கு தொலைபேசி இலக்கங்கள்
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 வரையில் அதிகரித்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும், காவற்துறை அதியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தவர்கள் 500 பேர் வரையில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது வரை 176 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று …
Read More »பரிதாபமாக உயிரிழந்த டென்மார்க் குழந்தைககள்
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களின் டென்மார்க்கை சேர்ந்த Anders Holch Povlsen என்பவரின் மூன்று குழந்தைககள் உயிரிழந்துள்ளதாக டேலி மைல் இணைய பிரிவு தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்புக்கு முன்னர் தனது 04 குழந்தைகளுடன் தந்தை { Anders Holch Povlsen } புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 03 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »