பருத்தித்துறை -நெல்லியடியில் சுற்றிவளைப்பு !

பருத்தித்துறை

யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இன்று அதிகாலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதும் சுற்றிவளைப்பு தொடந்து கொண்டிருப்பதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடா்ந்து கொண்டிருக்கின்றது. சகல வா்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் பொது கட்டடங்கள் என அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது. குறித்த சுற்றிவளைப்பில் இதுவரை 3 போ் …

Read More »

இன்னும் 12 மணி நேரத்தில்… ஃபானி புயலில் இருந்து தப்புமா வட தமிழகம்..?

இன்னும்

இன்னும் 12 மணி நேரத்தில் ஃபானி புயல் உருவாகி, வரும் 30 ஆம் தேதி மாலை வட தமிழகம் – தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனால் கனமழை இருக்ககூடும் என எச்சரிக்கை …

Read More »

கோட்டைவிட்ட இலங்கை அரசு: மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி

கோட்டைவிட்ட

இலங்கையில் நேற்று இரவு மீண்டும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை பலர் உயிர் இழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து இலங்கை அரசு நாடுக் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு, …

Read More »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கோட்டாபய தெரிவிப்பு!

கோத்தபய ராஜபக்ச முன்னிலை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட்டு, புலனாய்வுத்துறையை வலுப்படுத்தி, பொதுமக்களை கண்காணிப்பதன் மூலம், இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் பரவுவதை தம்மால் தடுக்க முடியும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரொயிட்டர்ஸ் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். யுத்தக்காலத்தில் தம்மால் கட்டியெழுப்பப்பட்ட தீவிர கண்காணிப்பு கட்டமைப்பையும், புலனாய்வு வலையமைப்பையும் பலவீனப்படுத்தாது இருந்திருந்தால், இவ்வாறான தாக்குதல்களை இந்த அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தி இருக்க முடியும். அரசாங்கம் இந்த …

Read More »

தேசிய தவ்ஹீத் அமைப்பை தடைசெய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை – ஜனாதிபதி

ஜனாதிபதி

தேசிய தவ்ஹித் ஜமாத்தை தடை செய்வதற்கு அவசியமான சட்டத்திட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகப்பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார். தற்போது இலங்கை சட்டத்திட்டங்களின்படி, தேசிய தவ்ஹீத் அமைப்பை தடைசெய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை. இந்த நிலையில் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு அந்த அமைப்பை தடை செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு மறுதினமே இந்த …

Read More »

நாட்டில் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கான காரணம்

நாட்டில்

குற்றவாளிகள் கண்முன் நின்றபோதும், கண்களை மூடிக்கொண்டதால்தான் நாட்டில் தற்போதைய அசாதாரண சூழ்நிலை உருவானது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களை தடுத்திருக்க கூடிய நிலைமை முன்னதாக இருந்தது. ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. குற்றவாளிகளை அறிந்தும் நடவடிக்கை எடுக்காதிருக்கின்றமை அரசியல் லாப நோக்கில் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

சாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்பு!

சாய்ந்தமருது

துப்பாக்கி மோதல் பதிவாகி இருந்த கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடகப்பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். 6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு …

Read More »

நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர்

நாட்டு மக்களுக்கான

இலங்கையில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் அடையாளம் காணப்பட்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் உள்நாட்டில் இந்த பயங்கரவாதிகளை அழிப்பதால் மாத்திரம், பூகோளரீதியான பயங்கரவாதத்தை அழித்துவிட …

Read More »

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 சந்தேகநபர்கள் கைது

கடந்த 24

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அம்பாறையில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Read More »

அம்பாறையில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்!

அம்பாறை

அம்பாறை – சாய்ந்தமருது, நிந்தவூர் பகுதிகளில் நேற்றையதினம் இராணுவமும் காவற்துறையினரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தாக்குதல்களை அடுத்து, தற்போது அந்த பகுதியில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவ ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. புலனாய்வுத் தகவல் அடிப்படையில் இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்களால் 3 வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதுடன், பாதுகாப்பு தரப்பினரை நோக்கி துப்பாக்கி தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து இராணுவம் அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் …

Read More »