பயங்கரவாத அபாயம் முற்றிலும் குறைந்துவிடவில்லை – பிரதமர்

பயங்கரவாத அபாயம்

உலகமே பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளதால் நாட்டினுள் நிலவும் பயங்கரவாத அபாயம்; முற்றிலும் குறைந்துவிடவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

Read More »

சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

சுற்றுலா

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் . பல்கலைக்கழக உப வேந்தர் பதவி நீக்கம்

Read More »

யாழ் . பல்கலைக்கழக உப வேந்தர் பதவி நீக்கம்

யாழ்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடிதமொன்று கிடைத்துள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் , இது குறித்து எமது செய்திச் சேவை மேற்படி உப வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் அவர்களுக்கு தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு வினவியிருந்தது. எனினும் , அவ்வாறான எந்த கடிதமும் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார். சரத் பொன்சேகா தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்று …

Read More »

சரத் பொன்சேகா தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்று கடிதம்!

சரத் பொன்சேகா

ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை சட்ட ஒழுங்குகள் அமைச்சராக நியமிக்க கோரி, ஐக்கிய தேசிய கட்சியின் 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த கடிதம் நேற்று நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் இன்று வரையில் 89 பேர் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து …

Read More »

தற்போதைய நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று

நாளைய தினம் தீர்மானம்

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் இன்று 1 மணி முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை, சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. …

Read More »

சென்னையில் இருந்து வந்த நபர் கைது!

ஒருவர் கைது

ஐஸ் ரக போதைப்பொருள் 2.9 கிலோ கிராமுடன் சென்னையில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 68 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புனித ரமழான் நோன்பு நாள் இன்று முதல் ஆரம்பம்.

Read More »

புனித ரமழான் நோன்பு நாள் இன்று முதல் ஆரம்பம்.

புனித ரமழான்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ரமழான் மாத முதலாம் நோன்பினை இன்று அனுஷ்டிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை தலை பிறை தென்படாததால், இன்று முதல் நோன்பினை அனுஷ்டிக்க கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு தீர்மானித்திருந்தது. இதன்படி இன்று அதிகாலை முதல் முஸ்லிம்கள் நோன்பினை அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்திற்கு ஆதவளிக்க தயார் – ஜீ.எல்.பீரிஸ்

Read More »

இன்றைய ராசிப்பலன் 07 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 07-05-2019, சித்திரை 24, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பின்இரவு 02.17 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.27 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் மாலை 04.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. அட்சய திருதியை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, …

Read More »

அரசாங்கத்திற்கு ஆதவளிக்க தயார் – ஜீ.எல்.பீரிஸ்

ஜீ.எல்.பீரிஸ்

மனித உயிர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணி மற்றும் கூட்ட எதிர்க்கட்சியினர் நிபந்தனைகள் இன்றி ஆதரவளிக்க தயார் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். யாழ் பல்கலை மாணவர்களை பிணையில் விடுவிப்பதா?

Read More »

யாழ் பல்கலை மாணவர்களை பிணையில் விடுவிப்பதா?

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளார் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிப்பதா? அல்லது வழக்கிலிருந்து விடுதலை செய்வதா? என்ற கட்டளை நாளை மறுதினம் புதன்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றறர்போல் வெளிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவம் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடையதும், மாவீரர்களுடையதும் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கோப்பாய் காவற்துறை …

Read More »