2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின், அச்சுறுத்தல் விடுப்போரின் தொழில்வாய்ப்பு பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவரான நீதியரசர் உபாலி அபேரத்ன இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக் புற்றுநோய் தடுப்பு ஊசிகளைப் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட மோசடி குறித்து பெண் மருத்துவர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். …
Read More »இலங்கை உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து ஐ நா பொதுச் செயலாளர் கருத்து!
இலங்கை, நியூஸிலாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது பயங்கரவாத அச்சுறுத்தலின் சர்வதேச ரீதியிலான துயரமான நினைவூட்டல்களாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு பயணத் திட்டத்தை நிவ்யோர்க்கில் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு பல்வேறு அடிப்படைக் காரணங்களுக்கு அமையவே பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் நிறுவப்பட்டது. சர்வதேச …
Read More »மகிந்த பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கை!
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி கோரியிருந்த விவாதத்தை மூன்றாவது நாளாகவும் நடாத்த இன்று நாடாளுமன்றில் அனுமதி கிடைத்தது. அதன்படி , ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர், நாளைய தினமும் இந்த விவாதத்தை நடத்த ஒருமனதாக தீர்மானித்தனர். இதேவேளை , நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் விரிவான ஆய்வொன்றிற்கும் மற்றும் விசாரணைக்கும் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ , பிரதமரிடம் கோரியிருந்தார். நாடாளுமன்றில் …
Read More »இன்றைய ராசிப்பலன் 09 வைகாசி 2019 வியாழக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 09-05-2019, சித்திரை 26, வியாழக்கிழமை, பஞ்சமி திதி இரவு 11.27 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 03.17 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பகல் 03.17 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, …
Read More »அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு – ஒரு மாணவன் பலி … 8 பேர் படுகாயம் !
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு மாணவர் பலியாகியுள்ளார். அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாகாணம், ஹைலேண்ட் ரான்ச் என்ற பகுதியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளியான ஸ்டெம் (STEM – science, technology, engineering, and mathematics) பள்ளியில் திடீரென்று இரண்டு மாணவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கித் தாக்குதல் நடத்திய …
Read More »வேலையின்றி தவிக்கும் சுற்றுலா பேருந்து பணியாளர்கள்
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களால் சுற்றுலாதுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களினால் வெளிநாட்டு பிரஜைகள் 44 பேர் உயிரிழந்த நிலையில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வாராமை காரணமாக 550 மேற்பட்ட சுற்றுலா பேருந்துகள் தரித்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நீல் ஜயதிஸ்ஸ எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். …
Read More »ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்பிற்கு
ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை குறித்த சந்திப்பு கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் …
Read More »சாய்ந்தமருதிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட குழுவினரும் பங்கு கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது, ஜனாதிபதி அங்குள்ள அரச அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்துள்ளார். வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்
Read More »வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்
வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் விசாரணை குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த அறிக்கை நாளைய தினம் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம்
Read More »இன்றைய ராசிப்பலன் 08 வைகாசி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 08-05-2019, சித்திரை 25, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 12.59 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 03.59 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, …
Read More »