ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

அமலாக்கத்துறையினரிடம் சரணடைய தயார்.. ப சிதம்பரம் தரப்பில் வாதம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ப சிதம்பரம், அமலாக்கத்துறைனரிடம் சரணடைய தயார் என அவரது தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டார் ப சிதம்பரம். பின்பு 4 முறை காவல் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே அமலாக்கத்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்கில் ப சிதம்பரம் தரப்பில் அளிக்கப்பட்ட மேல் முறையீட்டு ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இதனால் அமலாக்கத்துறை ப சிதம்பரத்தை கைது செய்வதற்கு எந்த தடையும் இல்லை.

இந்நிலையில் ப சிதம்பரம் அமலாக்கத்துறையினரிடம் சரணடைய தயார் என நீதிமன்றத்தில் அவரது தரப்பு வாதிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …