சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத் தளங்களை கண் காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெறுப்பு, கோபம் ஏற்படுத்தும் கருத்துக்கள், போலியான தகவல்கள், தவறான அர்த்தம் உள்ளடங்களான கருத்துக்கள் வெளியிட்டு மக்களை பிழையாக வழிநடத்தல் மற்றும் குழப்பம் ஏற்படுத்துதல் நபர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது.
தவறாக நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு ஊடாக இலங்கை முகநூல் அதிகாரிகளிடம் அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பாருங்க :
தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி: பின்வாங்குமா குர்து படைகள்?
சென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை!
150 ஏக்கர் காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கவுள்ள இராணுவம்..!
யுத்தத்தில் சரணடைந்த 2994 புலிகள் படுகொலை; கோத்தா வாக்கு மூலம்..!