இலங்கையில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களின் பின்னணியில் வெளிநாடொன்றை சேர்ந்த சூத்திரதாரியிருக்கலாம் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்
ஸ்கை நியுசிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனது நாட்டை விட்டுவிடுங்கள் என்ற செய்தியை ஐஎஸ் அமைப்பிற்கு தெரிவிக்கவிரும்புவதாகவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஐஎஸ் அமைப்பிற்கு என்னிடம் ஒரு செய்தியுள்ளது எனது நாட்டை விட்டுவிடுங்கள் என்பதே எனது அந்த செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐஎஸ் அமைப்பு சிறியநாடுகளை இலக்குவைக்கும் தந்திரோபாயத்தை பின்பற்ற ஆரம்பித்திருக்கலாம் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த தசாப்தத்தில் இலங்கையிலிருந்து சென்று ஐஎஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்ற சிறிய குழுவினர் குறித்து அதிகாரிகளிற்கு தெரிந்;திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விசாரணைகளின் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.