தீவிர பாதுகாப்பிற்குள்

தீவிர பாதுகாப்பிற்குள் கண்ணகி அம்மன் உற்சவம்! !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவம் இன்று நடைபெறும் நிலையில் சுமார் ஆயிரம் வரையான பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை இராணுவத்தினரும் ஆலயத்திற்குள்நுழையக்கூடிய அனைத்து பாதைகளிலும் ஆலயத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்ட்ருக்குள் சுமார் 3 இடங்களுக்கு குறையாது வீதி தடைகளை ஏற்படுத்தி சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு ஆலய வளாகத்தை சூழவும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு ஆலய உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி வீதிகளெங்கும் பொலிசாரும் பாதுகாப்பு க்கடமையில் ஈடுபட்டுள்ளனர்

கடந்த 21 ம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களால் மக்கள் அச்சமடைந்த சூழலில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல லட்சம் மக்கள் வருகைதரும் இந்த ஆலய வளாகத்தில் பலத்த பாதுகாப்பை அவதானிக்க முடிகிறது.

ஆலயத்துக்குள் நுழையும் பக்தர்கள் அனைவரும் சோதனையின் பின்னரே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஏற்கனவே தெரிவித்ததை போன்று உணவகங்கள் குளிர்பான கடைகள் மற்றும் கச்சான் கடைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறன. ஏனைய கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆலய வளாகத்தில் குடிநீர் சுகாதார முதலுதவி வசதிகள் அனைத்தும் செய்யப்பட்ட நிலையில் எந்த அச்சமுமின்றி பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை செய்யக்கூடிய நிலைமை காணப்படுவதை அவதானிக்க முடிந்தது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நேற்றைய தினம் யாத்திரை வந்த பக்தர்கள் பலர் ஆலய வளாகத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்தோடு மக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது

ஆலய உற்சவத்தில் கலந்துகொள்ளவரும் பக்தர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைவாக அடையாள அட்டை கொண்டுவருவது அவசியம் அத்தோடு தூக்கு காவடிகள் வெளியில் இருந்து கொண்டுவருவது தடை ஆலய உள்வளாகத்தில் மட்டும் தூக்கு காவடி நேர்த்தியை மேற்கொள்ளலாம் என்ற விடயங்களும் ஏற்கனவே நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தரப்பால் குறிப்பிடப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …