பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் பீட்டர் போல்ட் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் அவர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோப்பாய் காவல்துறையில் முன்னிலையாகுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.