மட்டு போதனா வைத்தியசாலையில் விடுதி இல 22
நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் அலட்சியம்.
அவ் விடுதியில் இருந்து நோய் குணமாகி வீடு செல்லும் நோயாளிகளுக்கு அவ் விடுதியில் உள்ள வைத்தியர்கள் மாலை 4,5 மணிக்கு பின்னரே அவர்களுக்குரிய நோய் நிர்ணய அட்டை மற்றும் வெளி நோயாளர் பிரிவில் மருந்துகள் எடுக்கும் அட்டை போன்றவற்றை எழுதி கொடுக்கின்றனர்.
இதனால் தூர பிரதேசத்தில் இருந்து வரும் மக்கள் மருந்து வகைகளை எடுத்து வெளியேறும் போது அவர்கள் உள்ள பிரதேசங்களுக்கு பஸ் சேவை மாலை நேரத்தில் இல்லாததால் குணமாகி செல்லும் நோயாளிகள் மட்டு பஸ் தரிப்பு நிலையத்தில் இரவு தங்கியிருந்து செல்வதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே வைத்தியர்கள் விடுதியில் வீண் கதை பேச்சுகளை, தவிர்த்து உரிய நேரத்திற்கு இதை செய்ய வேண்டும்.
இதை விடுதி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.