நெற் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி பரவிச்செல்லும் படைப்புழு தொடர்பில், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என விவசாயத் திணைக்களம் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் அநுர விஜேதுங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சில மாதங்களுக்கு முன்னர் படைபுழுவின் தாக்கம் பாரிய அளவில் காணப்பட்டது.
எனினும் தற்போது, நெற் பயிர்களுக்கு படைபுழுவை ஒத்த புதிய வகை பீடைகளால் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது காலத்துக்கு காலம் ஏற்படும் தாக்கங்களாகும்.
அவற்றை எண்ணி அச்சமடையத் தேவையில்லை.
அது குறித்து விவசாயத் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என, பிரதி விவசாயப் பணிப்பாளர் அநுர விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அநுர விஜேதுங்க, விவசாயத் திணைக்களம், பிரதி விவசாயப் பணிப்பாளர் அநுர விஜேதுங்க