அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த ஆண்டின் ஆசியாவின் சர்வதேச எழுச்சி நட்சத்திரம்(International Rising Star of the year – Asia Award) என்ற விருது வழங்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அமெரிக்க பயணம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8 முதல் நவம்பர் 17 வரை அரசுமுறை …
Read More »கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனை ஏற்று, விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பாசன நிலங்கள் 5,860 ஏக்கரும், புதிய பாசன நிலங்கள் 5,000 ஏக்கரும் பாசன வசதி பெறும் வகையில் 8ம் தேதி முதல் …
Read More »ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக வர மாட்டார்
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெ.நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக நன்றி …
Read More »மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த 2-ம் தேதி நடிகை மீரா மிதுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. எனக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி அரசு மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதனாலேயே தான் மும்பையில் குடியேறிவிட்டதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் வேறு மாநிலத்திற்கு …
Read More »சசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்
சசிகலா குடும்பத்தினர் நடத்தி வரும் 9 போலி நிறுவனங்களின் 1, 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2017-ம் ஆண்டு சோதனை நடத்தினர். சசிகலா குடும்பத்தினர், 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி 1,500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு …
Read More »வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை
அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. எனவே சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இன்று அந்தமான் கடற்பகுதிக்கும் நாளை, நாளை மறுதினம் மத்திய …
Read More »சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே… டிப்டாப்பாய் சிறையில் போஸ் கொடுக்கும் சசிகலா!
பெங்களூரு சிறையில் சிறை தண்டனை அனுபவித்து அரும் சசிகலாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன். இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவார் என செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. கர்நாடக …
Read More »திருவள்ளுவரை அவமதித்தால் ??? சீமான் ஆவேசம்
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு குறித்து சீமான் “ வள்ளுவனை அவமதித்தால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார். திருவள்ளுவர் காவி அங்கி, நெற்றியில் திருநீர் அணிந்தது போல் சமூக வலைத்தளத்தில் வைரலான புகைப்படம் தமிழகத்தில் பெரும் விவகாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் சாணியை பூசி அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின், கம்யூனிஸ்ட் …
Read More »மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா
நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பறவை முனியம்மா காலமாகியுள்ளார் என்ற செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவைப் பொறுத்தவரை வசதியான ஆடம்பர வாழ்க்கை எல்லாம் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு தான். ஆனால், குணச்சித்திர நடிகராக நடித்த பல்வேறு நபர்கள் இறுதியில் மிகவும் மோசமான நிலையில் சென்ற கதைகளை நாம் பல கேட்டுள்ளோம் அந்த வகையில் பிரபல நடிகையும் நாட்டுப்புற பாடகியுமான பரவை முனியம்மா அவருக்கும் அதே கதிதான். தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், …
Read More »ஸ்டாலினுடன் ஹெச்.ராஜா சந்திப்பு
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் திகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை ஹெச்.ராஜா சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை ஸ்டாலினிடம் வழங்க ஹெச்.ராஜா சென்றதாக கூறப்படுகிறது. இதையும் பாருங்க : சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு…பாடம் …
Read More »