இலங்கை

இலங்கை

விசேட அறிக்கை அடுத்த வாரத்தில்

வெடி குண்டு

ஏப்ரல் 21 இல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் அவரிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இந்தக் குழு தனது இரண்டு இடைக்கால அறிக்கைகளை …

Read More »

மாலத்தீவை அடுத்து இலங்கை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

மாலத்தீவு நாட்டில் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு நாட்டில் இருநாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பகல் 12.05 …

Read More »

இந்தியப் பிரதமாின் இலங்கை விஜயம் சர்வதேசத்திற்கான செய்தி

இலங்கை விஜயம்

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் இலங்கை விஜயம் சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை வழங்குவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏ.என்.ஐ ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ளபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும், மாலைதீவுக்கும், இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் …

Read More »

உந்துருளியில் பயணித்த இளைஞா் பேருந்தில் மோதி பலி

பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவா் உயிரிழந்துள்ளாா். நேற்று மாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்த இளைஞன், பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பேருந்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பில் இயங்கி வருகின்ற தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணி புரிகின்ற குறித்த இளைஞர், ஆடைத் தொழிற்சாலையில் வேலை முடித்து மீண்டும் …

Read More »

முஸ்லிம் அமைச்சா்கள் பதவி விலகியமை குறித்த வா்த்தமானி அறிவித்தல் வெளியீடு

வர்த்தமானி அறிவித்தல்

அனைத்து முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், கபீர் ஹாஸிம், அப்துல் ஹலீம் ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். அத்துடன், பைசல் காஷிம், மொஹமட் ஹரீஸ், அமீர் அலி மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோரும், பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பும் தங்களது அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார் என வர்த்தமானி அறிவித்தலில் …

Read More »

இலங்கையில் சிறுவர் பாலியல் முறைக்கேடுகள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

இலங்கையில்

இலங்கையில் சுற்றுலா மற்றும் பயணத்துறையில் சிறுவர் பாலியல் முறைக்கேடுகள் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார்கள் பாலியல் முறைக்கேடுகளுக்கு ஆளாவதில் இருந்து பாதுகாப்பதற்கான கொள்கைகள், இலங்கையில் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் அமுலாக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Read More »

அத்துரலிய ரத்ன தேரர் சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றம்

அத்துரலிய ரத்ன

கண்டி போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று காலை சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை வழமைக்கு திரும்பி வருவதன் காரணமாக இவ்வாறு அவர் சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன் அத்துரலிய ரத்ன தேரருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏனையோரும், தற்போது சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை …

Read More »

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ரஜரட்ட நிபுணத்துவ தொழிலாளர்கள் ஒன்றியம்

எதிர்க்கட்சி தலைவரை

ரஜரட்ட நிபுணத்துவ தொழிலாளர்கள் ஒன்றியம், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது 12 விடயங்கள் அடங்கிய திட்ட வரைவும் எதிர்க்கட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் சேவை புரியும் அரசாங்க அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலாநிதிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியாளர்கள் இந்த திட்ட வரைவை தயாரிப்பதற்கு பங்களிப்பு வழங்கியுள்ளனர். தளபதி 63′ படத்தை முதலில் பார்த்தது நான் …

Read More »

பதவி விலகியமை குறித்த வர்த்தமானி அறிவித்தல்

வர்த்தமானி அறிவித்தல்

ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலகியமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள், இன்று நாடாளுமன்றம் கூடும் போது பின்வரிசையில் அமர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் நேற்றைய தினம் தமது பதவிகளில் இருந்து விலகினர். இதற்கமைய அமைச்சரவை அந்தஸ்துள்ள நான்கு அமைச்சர்கள், …

Read More »

ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி

ஜனாதிபதி

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த புரிந்துணர்வுடனும் புத்திசாதூரியத்துடனும் செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும். அத்தோடு நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று …

Read More »