இலங்கை

இலங்கை

“மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்”

பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

நாட்டில் நிலவும் பதற்ற நிலையினால அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பொலிஸ் ஊடரங்குச் சட்டம் இன்று பிற்பகல் அமுல்படுத்தப்பட்டதுடன், அந்த ஊடரங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகம் அறிவித்திருந்தது. இந் நிலையிலேயே தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி மறு அறிவித்தல் வரும் …

Read More »

அமைதியையும் சமாதானத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்கவும் – சஜித்

சஜித்

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் உயிர் இழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு இதுபோன்ற நெருக்கடி நிலையில் அமைதியை சமாதானத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை பார்வையிட்டதன் …

Read More »

உயிரிழந்தோர் தொகை 207 ஆக அதிகரிப்பு . 500 பேர் காயம் 7 பேர் கைது : 9 வெளிநாட்டவர்கள் பலி

உயிரிழந்தோர்

இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 வரை அதிகரித்துள்ளது.காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்கொலை தாக்குதல்கள் கூடுதல் அளவில் நடத்தப்பட்டுள்ளது. ஒரே குழுவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் சொல்கின்றனர். இறந்த வெளிநாடடவர்களில் துருக்கியை சேர்ந்த இருவரும் , டர்ச் ஒருவரும் , ஷங்கிரி லா ஹோட்டலில் நடந்த தாக்குதல் சி சி ரி வி யை புலனாய்வு …

Read More »

வெடிச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக உயர்வு

இந்தியா

* நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, காயமடைந்த 469 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். * நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் நாளை மறுதினமும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். * நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம் 6 …

Read More »

அப்பாவி உயிர்களை பலியெடுக்கும் தாக்குதல்கள் கோழைத்தனமானவை: ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸ்

அப்பாவி மனித உயிர்களை இலக்குவைத்து, கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாயலங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்கள் சிலவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமானதும் கோழைத்தனமானதுமான குண்டுத் தாக்குதல்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் வன்மையாக கண்டிப்பதாக கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களை கண்டித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். …

Read More »

மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு!

நாட்டின்

நாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டிசில்வா குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்தும் விடுதிகளில் தங்கியிருக்க முடியும் எனவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »

திட்டமிட்ட வெடிச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் – பிரதமர்

ரணில் விக்ரமசிங்க

நாட்டில் பல்வேறுபட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்களினால் இறந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன். இந்த வெடிச்சம்பவங்களுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை அசாதாரண சூழ்நிலையில் நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையாக செயற்பட வேண்டும். நாடுபூராகவும் இடம்பெற்ற திட்டமிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டணை பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கான அதிகாரங்கள் பாதுகாப்பு அனுசரனைகள் …

Read More »

மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கை!

புலனாய்வு பிரிவினர், முப்படையின்

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த அளப்பறிய சேவையாற்றிய புலனாய்வு பிரிவினர், முப்படையின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் முக்கிய தரப்பினரை அவமதித்து கட்டுப்படுத்தியதன் விளைவு அப்பாவி மக்களை இன்று பாதித்துள்ளது. ஆகவே இத்தாக்குதலில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் எதிர்பாராத விதத்தில் இடம்பெற்றுள்ள குண்டு தாக்குதல்கள் கடந்த …

Read More »

சமூகவலைத்தளங்கள் முடக்கம்.

தடை தொடர்கிறது

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிற்க்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பாக முகப்புத்தகம், வைபர் மற்றும் வாட்ஸாப்ப் ஆகிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை நாட்டில் இன்று காலை முதல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் 187 பேர் கொள்ளப்பட்டுள்ளதுடன் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் குண்டு வெடிப்பு சம்பங்களை மையப்படுத்தி போலியான தகவல்கள் பதிவேற்றப்படுகின்றமையினால் தற்காலிகமாக …

Read More »

அமுலுக்குவரும் ஊரடங்கு சட்டம்.

நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நாயகத்தினால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »