தமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன் வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலையாவது ஆக குறைந்தது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற பயன்படுத்தவே களமிறங்கியுள்ளேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. அது குறித்து சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அது …
Read More »இலங்கை அதிபர் தேர்தல் – முன்னாள் அதிபரின் மகன் போட்டி
இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே, திசநாயகே, சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய அதிபரை தேர்வுசெய்வதற்கான தேர்தல், நவம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது. இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் சிறிசேனா மீண்டும் போட்டியிடுகிறார். ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் ராஜபக்சே-வின் …
Read More »யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ள ஓம்பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது
யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ள ஓம்பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது – கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிவரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிராந்திய அலுவலக திறப்புக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிதிநிதிகள் எவரும் துணைக்நிற்க கூடாது என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார். இன்று 22-08-2019 கிளிநொச்சியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இடம்பெற்ற …
Read More »இந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே
இந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச நிறுவனத்தின் 23-வது மாநாடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து சமுத்திர பிராந்தியத்தில் பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் காணப்படுவதாக கூறினார். இலங்கையை பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன்படி, கண்டி – அம்பாந்தோட்டை, குருணாகலை – திருகோணமலை …
Read More »கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக இன்று மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்தே இன்று காலை இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். விஷ்ணுகாந்தி வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிபத் தாயாரும், அவரது மகனான விஷ்ணுகாந்தி லிங்கேஷ்வரன் (வயது 34) என்ற இளைஞருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரினதும் உடல்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றபடியால் அவர்கள் நேற்றிரவு அல்லது இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் …
Read More »இது சிங்களவர்களின் நாடு! தமிழர்களே கோபிக்காதீர்!!
காவிகளின் பலத்துடன் சிங்கள அரசை அமைத்தே தீருவோம் என கண்டியில் ஞானசார தேரர் சூளுரை “இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும்போல் நாட்டுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும். நாங்கள்தான் இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி அல்ல. உலகில் சிறுபான்மை என்றாலும் நாங்கள் கெளரவமான இனம்.” – இவ்வாறு கண்டியில் இன்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் கலகொட …
Read More »தூக்கிலிடப்படுபவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியீடு
– 2 சிங்களவர்கள், 1 தமிழர், 1 முஸ்லிம் கைதிகளுக்கு முதலில் தண்டனை மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை பெற்றுள்ளோரில் 08 முஸ்லிம்கள், 08 தமிழர்கள் மற்றும் 04 சிங்களவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதன் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர், தமிழர் ஒருவர் மற்றும் முஸ்லிம் ஒருவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். மரணதண்டனைக்கு உட்படுத்த 20 பேர் கொண்ட பட்டியலை சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு …
Read More »ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி!
பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கை தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தஜிகிஸ்தானில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல் பற்றி தான் மிகுந்த வேதனையுடன் நினைவுகூருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். …
Read More »கொக்குவில் தொடரூந்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் – கொக்குவில் தொடரூந்து நிலையத்தின் அதிபர் உள்ளிட்ட 3 பேர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் குறித்து யாழ்ப்பாண காவற்துறையினர் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த தொடரூந்து நிலைய அதிபர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடரூந்து நிலையத்துக்கும் சேதமேற்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் ஆவா என்று அடையாளப்படுகின்ற வாள் வெட்டுக் …
Read More »உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது
மொரவெவ – பன்குளம் கோவில் அருகில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைதானதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைதானவர்கள் ஜயந்திபுர மற்றும் மஹதிவுல்வெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவ, 26 மற்றும் 32 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜிபி டேட்டா ரூ.5000: எந்த நாட்டில் தெரியுமா?
Read More »