எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.
அமைச்சர் மனோ கணேஷன் இதனை தெரிவித்துள்ளார்.
வழமையாக அமைச்சரவை கூட்டம் செவ்வாய்கிழமைகளில் இடம்பெறும்.
எனினும் கடந்த 11 ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறவில்லை.
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தம்மை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுமானால் தாம் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதுதவிர, புலனாய்வு பிரிவு அதிகாரிகளை இந்த தெரிவுக்குழுவிற்கு அழைத்து புலனாய்வு தகவல்களை வெளியிடுவதானது ஏற்புடையதல்லவென ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், அமைச்சர்கள் சிலர் இது தொடர்பில ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார