பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது.
இது வரை எட்டு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர்.
இதுவரை பல்வேறு டாஸ்குகள் நிறைவடைந்த நிலையில் இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் சிலர் மத்தியில் சண்டைகளும் வெடித்து வருகிறது.
நேற்றய நிகழ்ச்சியில் பால் டாஸ்கின் போது லாஸ்லியாவை கீழே தள்ளி விட்டதால், சாண்டியிடம் கத்தினார் கவின்.
பின்னர் லாஸ்லியாவிற்காக போட்டியை கொஞ்சம் நேரம் நிறுத்தியதால் ஷெரின், கவினிடம் சண்டையிட்டார்.
இதுவரை நடந்து முடிந்த டாஸ்கில் தற்போது வரை முகென் முதல் இடத்தில இருக்கிறார்.
அவரை தொடர்ந்து சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லாஸ்லியா பின்னர் இறுதியாக கவின் இருக்கிறார்கள்.
எனவே, கடைசி மூன்று இடத்தில் இருப்பவர்களுக்கு இந்த டாஸ்கில் வெற்றி பெற வாய்பே இல்லை.
எனவே. முகென், சாண்டி, தர்ஷன், ஷெரின் ஆகியோருக்கு தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கபட்டது.