இடைத் தேர்தலைத்

இடைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெறும்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சசிகலா, தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து அ.தி.மு.க பொதுக்குழுவில் பேசி முடிவு செய்யப்படும்.

இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.கவின் வெற்றித் தொடரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்துவருகிறது.

இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ‘கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் எண்ணம் பலிக்காது. மக்களின் மனநிலையை மு.க.ஸ்டாலின் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. சசிகலா, தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து அ.தி.மு.க பொதுக்குழுவில் பேசி முடிவு செய்யப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பா.ஜ.கவுடனான கூட்டணி தொடர்கிறது. டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். இடைத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.கவின் வெற்றித் தொடரும்’ என்று தெரிவித்தார்.

இன்றைய ராசிப்பலன் 24 ஜப்பசி 2019 வியாழக்கிழமை

இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் வெற் றியாளர்களுக்கு கிடைக்காத பெருமை. முகெனுக்கு கிடைத்துள்ளது.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …