விசேட தகவல் கட்டமைப்பு

விசேட தகவல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க தீர்மானம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், உள்நாட்டவர்களையும் உரிய முறையில் அடையாளம் காண்பதற்காக விசேட தகவல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தகவல்கள் மற்றும் அவர்களின் சுற்றுலா என்பன தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான குழு தற்போது நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள 2 கோடியே 30 இலட்சம் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுமார் 150 இலட்சம் பேர் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப முறைமைக்கு அமைய, இந்தக் கட்டமைப்பை உருவாக்குவதன் ஊடாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளினது மட்டுமல்ல, உள்நாட்டவர்களினதும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …