கொரோனா – 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி
யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டதையடுத்து வடக்குக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் காணப்பட்ட ஏ -9 வீதி மூடப்பட்டுள்ளது.
வடக்கில் கொரோனா நோய் பரவியுள்ள நோயாளர்களை கண்டறியவும், தொற்றுக்குள்ளானவர்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதை தடுக்கும் நோக்கிலுமே ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது.
போர்க்காலத்தில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்கான ஓமந்தை மற்றும் முகமாலையில் மூடப்பட்டது. அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்ததால் 14 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று மூடப்பட்டுள்ளது.
பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா
விசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்