திமுக

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் – திமுக அறிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், விருப்ப மனு அளிக்க அக்கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு , துணைப்பொதுச்செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 65 மாவட்டச்செயலாளர்களும் பங்கேற்றனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய
திமுக தலைவர் ஸ்டாலின், பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பொது மக்களிடன் எடுத்துச்சொல்ல அனைத்து மாவட்டங்களிலும் 16ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே விருப்பமனு பெறுவதாக அதிமுக அறிவித்துள்ளதாக கூறிய அவர்

உள்ளாட்சி தேர்தலை திமுக ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளதாகவும் தேர்தலை எதிர்கொள்ள எந்நேரமும் திமுக தயாராக உள்ளதாக கூறினார்.

மேலும் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்கள் கொடுக்கலாம் என்ற அவர் , உள்ளாட்சி தேர்தலிலும் நிச்சயமாக திமுக கூட்டணி தொடரும் எனவும் தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறினார்.

விருப்பமனு கட்டண விபரங்கள்:

மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் – ரூ.50,000

மாமன்ற உறுப்பினர் – ரூ.10,000

நகர்மன்றத் தலைவர் – ரூ.25,000

நகர்மன்ற உறுப்பினர் -ரூ.5000

பேரூராட்சித் தலைவர் – ரூ.10,000

பேரூராட்சி மன்ற உறுப்பினர் – ரூ.2500

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் – ரூ.10,000

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் – ரூ.5000

இதில் ஆதிதிராவிடர் , பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புவோர் கட்டணத் தொகையில் பாதி மட்டும் செலுத்த வேண்டும்.

விருப்பமான படிவத்தை 10 ரூபாய் செலுத்தி மாவட்ட தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு!

ரஜினிக்கு பதிலடி தந்த துரைமுருகன்..

சீமான் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒரே நாளில் இரண்டு படம் ரிலீஸ்!

பிரதமரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ராணுவம்..

பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் நீடிக்கிறது – ரஜினி!

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …