நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை அடுத்து ரியோ நாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாணா காத்தாடி, செம போத ஆகாத ஆகிய படங்களைத் தொடர்ந்து ரியோவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார் பத்ரி வெங்கடேஷ்.
இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் பாலசரவணன், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர்.
பயணப் பின்னணியில் இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, கொடைக்கானல், குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
https://twitter.com/nambessan_ramya/status/1183624935479971840
இதையும் பாருங்க :
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினை சந்தித்த முதல் இயக்குனர்
சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க.. காங்கிரஸ் மனு
“கீழடி அகழாய்வு பகுதியை இனிமேல் பொதுமக்கள் பார்வையிட முடியாது”