பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருவர் விஜய்யின் தாயாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இந்த சீசனுக்கான டைட்டிலை முகென் ராவ் பெற்றார்.
இரண்டாம் இடத்தை சாண்டியும், மூன்றாம் இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். ஆனால் இதுவரை நடந்த சீசனில் அதிகம் நட்பு பாராட்டப்பட்டது இந்த சீசன் தான். ஒவ்வொருவரின் வெற்றியையும் சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களின் இல்லங்களுக்குச் சென்று நட்பு பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தர்ஷனும், அபிராமியும் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தங்களது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்களும், பிக்பாஸ் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
https://www.instagram.com/p/B3hiO6PBXXh/?utm_source=ig_web_copy_link