பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர்.
கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர்.
இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர்.
கடந்த வாரம் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்த நாளே அபிராமி வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது.
ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார்.
அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார்.
அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார்.
ஆனால், அபிராமி வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக்கொண்டு இருந்தார் முகேன்.
அதே போல முகென் அடிக்கடி கைவினை பொருட்களை செய்து போட்டியாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
ஆனால், அபிராமிக்கு ரகசிய கைவினை பொருள் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதனை அபிராமி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பொருளை பார்க்கும் போது முகென் அணிந்திருந்த கால் சட்டை ஒன்றின் ஒரு பகுதி போல தான் இருக்கிறது.