இன்றைய பஞ்சாங்கம்
15-07-2019, ஆனி 30, திங்கட்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.48 வரை பின்பு பௌர்ணமி.
மூலம் நட்சத்திரம் மாலை 06.51 வரை பின்பு பூராடம்.
சித்தயோகம் மாலை 06.51 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும்.
பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
வேலையில் எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகும்.
வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும்.
சுபகாரியங்கள் கைகூடும்.
ரிஷபம்
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் நிலவும்.
எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள்.
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும்.
முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
மிதுனம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.
வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும்.
சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும்.
உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ற உயர் பதவிகள் அடையும் வாய்ப்புகள் அமையும்.
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும்.
ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும்.
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும்.
உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.
பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும்.
நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.
இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவர்.
வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.
உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும்.
பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
எடுத்த காரியம் வெற்றி அடைய மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை குறையும்.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம்.
உத்தியோக ரீதியாக அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும்.
நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
நண்பர்களின் சந்திப்பால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.
மகரம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும்.
வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள்.
பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
உடல் ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள்.
உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.
மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும்.
வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும்.
வியாபார ரீதியான பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
சுபகாரியம் கைகூடும்.
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,