பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 18 நாட்கள் ஆன நிலையில் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா.
ஓவியாவை போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உள்ளனர்.
தினமும் இவர் நடனமாடுவதைப் பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர்.
நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே இவருக்கு பல அர்மிகள் இவரது ரசிகர்கள் உருவாக்கினர்.
ஆனால் ஒரு சில ரசிகர்கள் லாஸ்லியா எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கிறார்.
அதற்கு அவர் பிக்பாஸ் வீட்டில் இல்லாமலேயே இருந்திருக்கலாம் என்பது போன்ற கருத்துகளையும் கூறு வருகிறார்கள்.
https://twitter.com/LosliyaArmy/status/1148579739575017473
இது ஒரு பக்கம் இருக்க லாஸ்லியா ஆர்மியை சேர்ந்த ரசிகர்கள் சிலர், அவருக்கு கட் அவுட் வைத்து, நடு ரோட்டில் பாலபிஷேகம் செய்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய கூடாது என மக்கள் கூறி வரும் நிலையில், லாஸ்லியா ரசிகர்கள் செய்த இந்த விஷயம் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.