வனிதாவின் கைது

வனிதாவின் கைது குறித்து மாலை முடிவு – போலீசார்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வனிதா மீதான ஆள் கடத்தல் புகாரில் அவரின் மகளிடம் கருத்தைக் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவருக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ல் திருமணமானது.

அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு வனிதாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே விவாகரத்தானது.

அவர்களது மகள் ஜோவிதா, தந்தையான ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் வனிதா தனது மகள் ஜோவிதாவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனையடுத்து தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் ஆனந்தராஜ் கொடுத்த குழந்தை கடத்தல் புகாரில், இன்று சென்னையிலுள்ள பிக்பாஸ் வீட்டில் வனிதாவை விசாரிப்பதற்கு தெலங்கானா போலீஸ் சென்றது.

இந்த விசாரணைக்கு தெலங்கானா போலீசார் சென்னை நசரத்பேட்டை போலீசாரின் உதவியுடன் விசாரணைக்கு சென்றுள்ளனர்.

இந்த விசாரணை இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வனிதாவின் மகளிடம் கருத்தைக் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மகள் தாயுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா?

அல்லது தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா?

என்பதை பொறுத்தே வனிதாவின் கைது குறித்து முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை வனிதாவின் கைது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …