யாழ்ப்பாணம் – கொக்குவில் தொடரூந்து நிலையத்தின் அதிபர் உள்ளிட்ட 3 பேர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் குறித்து யாழ்ப்பாண காவற்துறையினர் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.
கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த தொடரூந்து நிலைய அதிபர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடரூந்து நிலையத்துக்கும் சேதமேற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் ஆவா என்று அடையாளப்படுகின்ற வாள் வெட்டுக் குழு தொடர்பு பட்டிருப்பதாக கூறப்படுகின்ற போதும், அதற்கான ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை என்று யாழ்ப்பாணம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.