இலங்கையில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
இதன்போது நடப்பு அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளில் இருந்து மீண்டும் வழமைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆரயப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை , பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக சிங்கப்பூர் நோக்கி இன்று மதியம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.