பலவீனமடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு புத்துயிர் அளிக்கவே ஜேவிபியினால் அரசாங்கத்திற்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டு வரப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தடவையும் ஐக்கிய தேசிய கட்சி பலமடைந்து செல்கின்ற போது, அந்த கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கான வேளைகளை ஜேவிபியே மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையிலேயே தற்போதைய அவநம்பிக்கை பிரேரணையும் முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.